ச - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| சிதம்பரம் | திருத்தில்லை, கடவுளின் உறைவிடம் |
| சித்தார்த்தன் | புத்தன் |
| சிலம்பன் | முருகன், குறிஞ்சிநிலத்தலைவன் |
| சினேந்திரன் | அருகன், புத்தன் |
| சீதரன் | அரி, திருமால் |
| சீபதி | அருகன், கடவுள், திருமால் |
| சுகதன் | புத்தன், அருகன் |
| சுகன் | கந்தருவன், வியாசர் மகனாகிய சுகர் |
| சுகுணம் | நற்குணன் |
| சுதாகரன் | கருடன், சந்திரன், ஓர் அரசன் |
| சுந்தரம் | எழில் |
| சுந்தரன் | அழகன் |
| சுபன்னன் | கருடன் |
| சுரேசன் | இந்திரன், ஈசானன், முருகன் |
| செங்கணான் | திருமால் |
| செஞ்சடையோன் | சிவன், வயிரவன், வீரபத்திரன் |
| செந்தில் | முருகன் |
| செல்வம் | செல்வம் உடையவன்,பணம் |
| செவ்வேள் | முருகன் |
| செழியன் | செழிப்புடையவன், பாண்டிய மன்னன் |