ய - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| யானை | ஆனை,அத்தினி, அரசுவா, அல்லியன், தும்பு, கரி,அஞ்சனம், இருள், இபம், கஜேந்திரன், கருமா, சாகசம், சிந்துரம், சூகை, தந்தாயுதம், துருமாரி, தெட்டி, தெள்ளி, பஞ்சநகம், பண்டி,பிள்ளுவம், பிரளயம், நூழில், பகடு, வாரங்கம் , மதங்கம், மத்தவாரணம், மத்மா |
| யுகம் | கிரேதாயுகம் - 17,28,000 ஆண்டு |
| யூகி | புத்திசாலி |
| யமதூதன் | யமனது தூதன். |
| யாவச்சீவம் | வாழ்நாளுள்ள வரை. யாவச்சீவம் பிறருக்குழைத்தான் |
| யாவதும் | சிறிதும். யாவது மனங்கவல் பின்றி (பொருந. 94) |
| யாழ | ஒரு முன்னிலையசைச்சொல். யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் (கலித். 18). |
| யோனிப் பொருத்தம் | ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உண்டு. பெண், ஆண் நட்சத்திரங்கள், பெண்ணுக்குப் பெண் யோனியாகவும், ஆணுக்கு ஆண் யோனியாகவும் பகையில்லாமலிருந்தால் உத்தமம் |
| யாக்கை | தேகம் |
| யானைக் கற்றாழை | ஆனைக் கற்றாழை |
| யுவன் | இளைஞன் |
| யோனி பேதம் | ஊர்வன -11 |
| யாழ் | ஒரு வகை இசைக்கருவி. |
| யா | மரம் |
| யோசனை | எண்ணம், எண்ணக்கரு |
| யோனிக் கசிவு | வெள்ளைபடுதல் |
| யுக்தி | கையாளும் முறை |
| யமன் | இந்து மதப்படி இறப்புகளை நிருவகிக்கும் கடவுள். |