ஆ - வரிசை 54 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆரை | நீர்த்தாவரமான ஆரை, கோரைப்புல் போன்றதனால் பின்னப்பட்ட பாய் |
| ஆரியவர்த்தம் | ஆரியன் |
| ஆரிடர் | முனிவர் |
| ஆராதனம் | ஆராதனை |
| ஆகாமியம் | அக்கிரமம் |
| ஆவணக்களரி | ஆவணக்களம் |
| ஆக்கல் | படைத்தல் |
| ஆக்கினை | கட்டளை |
| ஆகம் | உடம்பு |
| ஆகமனம் | வந்து சேர்தல் |
| ஆகரம் | இரத்தினக் கற்கள் கிடைக்கும் சுரங்கம் |
| ஆகாசக்கோட்டை | (உண்மையில் இல்லாத) கற்பனை |
| ஆகாய கமனம் | காற்றில் நடந்து செல்லும் வித்தை |
| ஆகாசத்தாமரை | கொட்டைப்பாசி |
| ஆகாயம் | ஐம்பூதங்களில் ஒன்றான 'வெளி' வானம்; வாயுமண்டலம் |
| ஆகாதவன் | பகைவன் |
| ஆகு | எலி |
| ஆகுலம் | மனக் கலக்கம் |
| ஆங்காலம் | நல்ல காலம் |
| ஆசாபங்கம் | விரும்பியது பெறாத ஏமாற்றம் |