ஆ - வரிசை 47 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆழிமுரசோன் | மன்மதன். |
| ஆழிவிட்டோன் | சிவன், விட்டுணு. |
| ஆழிவித்து | முத்து. |
| ஆழிவெம்முரசோன் | மன்மதன். |
| ஆழ்ந்தகருத்து | உட்கருத்து. |
| ஆழ்ந்தவறிவு | மகா அறிவு. |
| ஆளன | எசமான். |
| ஆளியூர்தி | காளி, துர்க்கை. |
| ஆளிவிரை | ஒருவிரை. |
| ஆளோலை | அடிமைச்சீட்டு. |
| ஆள்விழுங்கி | நீளவங்கி. |
| ஆறாக்காரியம் | தோற்றம். |
| ஆறுகாட்டி | மாலுமி, வழிகாட்டி. |
| ஆறை | ஆற்றூர். |
| ஆற்காடு | ஓரூர். |
| ஆற்பலம் | சாரம், பலம். |
| ஆற்றலரி | சுடலைப்பூச்செடி, செங்கோட்டை. |
| ஆற்றலுடைமை | வலியுடைமை. |
| ஆற்றல்கேடு | வலியழிவு. |
| ஆற்றாக்கொலை | ஆற்றாப்பட்சம். |