ஆ - வரிசை 53 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆழியான் | திருமால் |
| ஆறுசூடி | சிவன் |
| ஆறுமுகன் | முருகன் |
| ஆனந்தன் | சிவன், அருகன் |
| ஆனன் | சிவன் |
| ஆனை முகன் | மூத்தபிள்ளையார் |
| ஆக்கிரோஷம் | வெறி : ஆவேசம். |
| ஆட்டம் கொடுத்தல் | நிலை தளர்தல். |
| ஆப்பு வைத்தல் | கோள் சொல்லுதல். |
| ஆர்ஜிதம் | ஒருவர் நிலத்தை அரசு தன்வயம் எடுத்துக் கொண்டு பொது நலனுக்கு ஆக்குதல். |
| ஆவன செய்தல் | தேவையானதைச் செய்தல். |
| ஆழம் பார்த்தல் | ஒருவருடைய உள்ளக் கருத்தை அறிந்து செயல்படுதல் |
| ஆளாக்குதல் | ஒருவனின் வாழ்க்கையில் வளம் காணச் செய்து முன்னேற்றுதல். |
| ஆறப்போடுதல் | பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாது தள்ளிப்போடுதல். |
| ஆனானப்பட்டவர் | திறமும் செல்வமும் மிக்கவர். |
| ஆஷாட பூதி | வெளித் தோற்றத்திற்குப் பொருத்த மில்லாது செயல் புரிபவர். |
| ஆஞ்ஞாசக்கரம் | அரசனது ஆணையாகிய சக்கரம் |
| ஆதோரணமஞ்சரி | எதிர்த்த மதயானைகளை அழித்தும் அடக்கியும்போடும் வீரனது சிறப்பை வஞ்சிப்பாவாற் றெடுத்துப்பாடும் பிரபந்தம். (தொன். வி. 283, உரை.) |
| ஆம்பல் | தாமரை |
| ஆலம் | நஞ்சு |