அ - வரிசை 138 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அநாதிசித்தன் | அருகக்கடவுள். |
| அநாதிசைவன் | சதாசிவமூர்த்தி. |
| அநாதிபெத்தசித்து | அநாதியே ஆணவமலத்திலே கட்டுண்டு கிடந்த ஆன்மா. |
| அநாதிரேக்கியம் | மிகுதியின்மை. |
| அநாத்தை | அவசங்கை, நிலையின்மை. |
| அநாமயம் | நோயின்மை. |
| அநாமை | அநாமிகை. |
| அநாரம்பம் | தொடக்கமின்மை. |
| அநாரியதித்தம் | நிலவேம்பு. |
| அநாரோக்கியம் | நோய். |
| அநிகர் | சேனையானோர். |
| அநிச்சிதம் | நிச்சயிக்கக்கூடாதது. |
| அநிட்டநிவர்த்தி | வேண்டாதனவொழிதல். |
| அநித்தியகாலம் | முடிவுகாலம். |
| அநித்தியசமாசம் | நித்தியசமாசமில்லாத சமாசம். |
| அநிமாவினம் | சாவு. |
| அநிமீலனம் | இறவாமை. |
| அநிமேடம் | பிசாசு, மீன். |
| அநிருதவாதி | பொய்பேசுவோன். |
| அநிருத்தபதம் | ஆகாயம். |