அ - வரிசை 137 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அநலக்கிரி | அண்ணாமலை. |
| அநலர் | அக்கினியுடையவர். |
| அநலாடி | சிவன். |
| அநலுதல் | கனலுதல். |
| அநலேறு | இடியேறு. |
| அநல்வென்றி | தங்கம். |
| அநவச்சின்னம் | எல்லைப்படாதது. |
| அநவத்தைப்படுதல் | முடிபுகாணாதுமுட்டுப்படுதல். |
| அநவ்வியயகிருத்து | அவ்வியமல்லாதகிருத்து. |
| அநற்கல் | சிக்கிக்கல். |
| அநற்றிரள் | சோதிரூபி. |
| அநாகதசிவமூர்த்தி | அனாகதசிவமூர்த்தங்கொண்டது. |
| அநாகதநாதம் | பராசக்தி. |
| அநாகாலம் | பஞ்சகாலம். |
| அநாசிகன் | மூக்கில்லாதவன். |
| அநாசிரிதன் | அபேட்சியாதவன். |
| அநாசிரியர் | ஆசிரியரல்லாதவர். |
| அநாதகி | சந்நியாசி. |
| அநாதரட்சகர் | கடவுள். |
| அகாதிசடிலன் | சிவன். |