ப - வரிசை 25 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| பரிதிவட்டம் | சூரியமண்டலம். வெங்கதிர்ப் பரிதிவட்டத்தூடுபோய் விளங்குவாரே (திவ்.பெரியதி, 4, 5, 10). |
| பலாந்தம் | ஒருகாற்காய்த்துப்பட்டுப்போம் பூண்டு (யாழ்.அக.) |
| பின்மாலை | வைகறை. பின்மாலையே திருவிளக்கேற்றி வைத்துத் தயிர் கடைவார்கள் (ஈடு 1, 3,1, ஜீ.) |
| பழமை | தொன்மை |
| பூர்வம் | ஆதி |
| பூருவம் | பழமை. பூருவ வயிரநாடிப்போர் விளைத்து (சேதுபு. கத்து. 37). |
| பெரும்பாடு | பேருழைப்பு |
| பெரும்பான்மை | புகழுரை. தலைமகளைப் பெரும்பான்மை கூறி (திருக்கோ. 164, உரை) |
| பசிந்தி | வெண்ணிறமுள்ளதும் 15-ஆங்குலம்வரை வளர்வதுமான கடல்மீன்வகை. |
| படி | அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு |
| படி | கற்க |
| பிடித்து | கைப்பிடிப்பொருள். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037) |
| பின்னடி | பிற்பட்டது |
| பின்னை | பின்னைப் புதுமைக்கும் (திருவாச. 7, 9) |
| புறன் | பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ. அவையடக். 9) |
| பூதராயன் | பிசாசம். (யாழ். அக.) |
| பூரி | மிக்க. நங்குடி கோத்திரப்பெயர் பூரிச்சிரேட்டம் (பிரபோத. 11, 91). -n. |
| பூரா | முழுதுமான |
| பெய்துரை | இடைப்பெய்து உரைப்பது |
| பெரிது | பெரியது. நன்மை கடலிற் பெரிது (குறள்,103) |