ப - வரிசை 22 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| படியளத்தல் | சோற்றுக்கு வழி செய்தல். |
| படுத்து விட்டது | தொழில் மந்தம் ஆதல். |
| படைப்பாளி | உருவாக்குனர் |
| பட்சபாதம் | வேண்டியவர் வேண்டாதவர் என்னும் கருத்து. |
| பட்டணப் பிரவேசம் | மடாதிபதி,குரு பூசை முடிந்ததும் நகரை வலம் வருதல். |
| பட்டர் | திருமால் கோயிலில் பூசை செய்பவர். |
| பட்டாதாரர் | நிலவுரிமையாளர். |
| பட்டாபிஷேகம் | முடிசூட்டு விழா. |
| பட்டாமணியம் | கிராம அதிகாரி. |
| பட்டிக்காடு | வசதியற்ற சிறு கிராமம். |
| பட்டி தொட்டி | சிறு கிராமமும் அதனையொட்டிய பகுதியும். |
| பட்டும் படாமலும் | முழுமையாக ஈடுபடாத. |
| பட்டு வாடா | விநியோகம். |
| பட்டை சாதம் | நைவேத்தியமாகப் படைக்கப்பட்டுப் பின்னர் வழங்கப்படும் சோறு. |
| பட்டை நாமம் | ஏமாற்றும் தன்மை. |
| பதம் பார்த்தல் | சோதித்துப் பார்த்தல். |
| பதிலடி | எதிர் நடவடிக்கை. |
| பதுக்கல் | சட்ட விரோதமாக மறைத்து வைத்தல். |
| பறை | தோற்கருவிகளின் பொதுப் பெயராகப் பறை என்பது வழங்க்பட்டுள்ளது. பறை என்ற சொல்லுக்குக் கூறு, சொல் என்ற பொருள்களில் இருக்கின்றன. |
| பெரும்புளகி | அரளி |