ச - வரிசை 23 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| சாசுவாதம் | நிலையானது. |
| சாடை மாடையாக | மறைமுகமாக. |
| சாட்சாத் | ஆதாரபூர்வமாக. |
| சாயபு | இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரைக் குறிப்பிடும் சொல். |
| சாயம் வெளுத்தது | கூறிய பொய் முதலான செயல்கள் தெரிந்து உண்மை அறியப்பட்டது. |
| சால்ஜாப்பு | பாசாங்கு. |
| சாவுகிராக்கி | எரிச்சலைத் தூண்டும் நபர். |
| சாவு மணி | தீயவை அழிதலைக் குறிப்பது. |
| சிக்கி முக்கிக் கல் | நெருப்பை உண்டாக்கக் கூடிய கல் வகை. |
| சிங்கப் பல் | மேல் வரிசையில் கோரைப் பல்லுக்குச் சற்று முன் நீண்டு முளைத்திருக்கும் பல். |
| சிங்கினாதம் | முசுடு பண்ணுதல். |
| சுத்தமோட்சம் | கிரகணம் முற்றும் விடுகை |
| சொட்டைவாளை | அம்பட்டன்வாளை |
| சீமையல்லி | சீமையல்லி மெக்ஸிகோ,அமெரிக்கா போன்ற இடங்களில் அதிகமாக வாழும் ஒருவகை மலரினமாகும். |
| சீமைமாதுளம்பழம் | சீமைமாதுளை |
| செங்கொடிமுந்திரி | செந்திராட்சை |
| சிறுகுறிஞ்சான் | அமுதுபுஷ்பம் |
| சூரியப் பத்திரி | சோரப் பத்திரி |
| சிவப்பு சந்தனம் | செங்குங்குமம் |
| சொல் | ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்; வார்த்தை |