எ - வரிசை 4 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| எக்களிப்பு | வெற்றி மகிழ்ச்சி. |
| எக்கச்சக்கம் | மிக அதிகம். |
| எகத்தாளம் | எள்ளல் தன்மை. |
| எவ்வரும் | யாரும். ஆங்கவை யெவ்வரும் பெறுகிலர் (கந்தபு. மயை யுப. 14). |
| எவ்வெலாம் | உள்ளவெல்லாம். எவ்வெலாவண்டத் துறைதரு மருத்தும் (கந்தபு. சூரனர. 11). |
| என்னது | எது. நீ என்னது சொல்கிறாய். |
| என்னர் | ௯யாவர் |
| என்னாங்கு | என்னிடத்து |
| எனையவன் | see எனைவன் |
| எனைவர் | யாவர் எனைவராயினும் (பெருங். வத்தவ. 3, 22). |
| எனைவன் | யாவன். |
| எம் | எம்மை, எம்மால் |
| எவள் | யாவள். |
| எவன் | யாவன் |
| எவை | யாவை. |
| என்னவன் | யாவன். |
| என்னன் | See என்னவன். என்ன னெவ்விடத்தன் (இரகு. யாக. 96). |
| என்னை | See என்ன. |
| எவற்று | எது. (யாழ். அக.) |
| எக்கே | வருத்தக் குறிப்பு. எக்கே யிதுவென் (திவ். பெரியதி. 10, 8, 8). |