எ - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| எல்லோ | அதிசயவிரக்கச்சொல். |
| எல்வை | காலம், நாள். |
| எவண் | எவ்விடம் |
| எவ் | எவை |
| எவ்வாறு | எவ்வழி. |
| எவ்விடம் | எந்தவிடம் |
| எழுநா | அக்கினி, கொடுவேலி. |
| எழுவரைக்கூடி | சவ்விரபாஷாணம். |
| எழுவான் | கிழக்கு. |
| எறும்பி | யானை. |
| எறும்பு | பிபீலிகை |
| எற்றை | என்று. |
| என்றா | ஓரெண்ணிடைச்சொல். ஒப்பிற் புகழிற்பழியினென்றா (தொல். சொல். 73). |
| என்னே | என்ன. |
| எண்டோளன் | சிவன் |
| எழினி | கடையெழு வள்ளல்களில் ஒருவன் |
| எதேச்சை | தன்னுடைய விருப்பப்படி(தன்விருபபம்). |
| எதேஷ்டம் | தேவைக்கு அதிகம். |
| எதார்த்தம் | வெளிப்படை |
| எண்பி | நிரூபணம் செய். |