ஆ - வரிசை 37 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆதிமூர்த்தி | கடவுள், ஆதிமூலம். |
| ஆதியங்கடவுள் | அருகன், கடவுள். |
| ஆதியந்தபதிச்சா | சீக்கிரவுச்சம், மகரச்சா. |
| ஆதியந்தமில்லாதவன் | கடவுள், சிவன். |
| ஆதிராச்சியம் | எகாதிபத்தியம். |
| ஆதிரௌத்திரம் | சௌவீரம். |
| ஆதிவராகன் | விட்டுணு. |
| ஆதிவருணன் | பார்ப்பான். |
| ஆதுலர்க்குச்சாலையளித்தல் | அற முப்பத்திரண்டினொன்று. |
| ஆத்தாடியுள்ளான் | ஒரு குருவி. |
| ஆஸ்தானக்கோழை | சபைக்கோழை. |
| ஆஸ்தான சந்தோஷம் | கோணங்கித்தன்மை, விகடக்கூத்து. |
| ஆஸ்தானசந்தோஷி | விகடக்கூத்தன்,விகடக்கூத்தி. |
| ஆத்திகேடு | ஆற்றாண்மை, சத்துக்கேடு. |
| ஆத்திக்கனி | வெருகு. |
| ஆஸ்திக்காரன் | சம்பத்துடையவன். |
| ஆஸ்திக்காரி | சம்பத்துடையவள். |
| ஆத்திகுடி | ஔவைசெய்த ஒரு நூல்,சிவன். |
| ஆத்தியன் | சிவன். |
| ஆத்தியு | ஆவத்து. |