அ - வரிசை 110 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அஞ்சனக்கிரி | நீலமலை. |
| அஞ்சனக்கோல் | அஞ்சனந் தீட்டுங்கோல். |
| அஞ்சனசலாகை | மைதீட்டுங்கோல். |
| அஞ்சனவண்ணம் | கருநிறம். |
| அஞ்சனேயன் | அனுமான். |
| அஞ்சனைநாமிகாவர்த்தமரோகம் | இமையைப்பற்றிய ரோக பேதங்களிள்ஒன்று. |
| அஞ்சாணிமூலி | அச்சாணிமூலி. |
| அஞ்சாரப்பெட்டி | அஞ்சறைப்பெட்டி. |
| அஞ்சாலியிடையர் | அஞ்சாரவிடையர். |
| அஞ்சாவிரா | பெருங்குமிழ். |
| அஞ்சி | எசமானன். |
| அஞ்சிகம் | கண். |
| அஞ்சிட்டன் | சூரியன். |
| அஞ்சுமாலி | சூரியன். |
| அஞ்சுருவாணி | அச்சுருவாணி. |
| அஞ்சுவரத்தகுன | அஞ்சத்தகுவன. |
| அஞ்சுவனம் | பஞ்சாக்ஷரம். |
| அஞ்செவி | செவியகம். |
| அஞ்செழுத்து | பஞ்சாக்கரம். |
| அஞ்ஞதை | அறியாமை. |