த - வரிசை 7 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| தாமரைக்கண்ணன் | திருமால் |
| தாமரையான் | திருமகன் |
| தாமன் | கதிரவன் |
| தாயுமானவர் | செவ்வந்தியீசர், ஒரு மெய்யறிவாளர் |
| தாரகன் | கண்ணன், தேர்ச்சாரதி |
| தாரகாரி | முருகன் |
| தாலகேதனன் | பலராமன், வீடுமன் |
| தோது | வசதி : பொருத்தம் வாய்த்தப்படி. |
| தோஷம் | தவிர்க்க முடியாத குறை. |
| தொடர்கதை | தொடர்ச்சியாக நிகழும் செயல். |
| தொடை தட்டுதல் | பரபரப்புடன் செயல் புரிய ஆயத்தமாதல். |
| தொடை நடுங்கி | அச்சம் உடையவன் : பயந்து நடுங்குபவன். |
| தொட்டால் சிணுங்கி | எடுத்ததற்கெல்லாம் அழத் தொடங்கும் தன்மை. |
| தொட்டுக் கொள்ள | இட்லி முதலிய சிற்றுண்டிக்குப் பக்க உணவாகவுள்ள சட்னி முதலாவன. |
| தொண தொண என்று | எரிச்சல் தருமாறு திரும்பத் திரும்பப் பேசுதல். |
| தொத்திக் கொள்ளுதல் | வாய்ப்பு நேரும் போது சரியாகப் பற்றிக் கொள்ளுதல். |
| தொப்பைத் தள்ளுதல் | வயிறு பருத்து முன் பக்கம் சாய்தல். |
| தொம்பக் கூத்தாடி | கழைக் கூத்தாடுபவன். |
| தொழில் காய்ச்சல் | ஒருவனது தொழில், மேன்மை கண்டு மற்றொருவன் கொள்ளும் பொறாமை. |
| தொள தொள என்று | உடலுக்குச் சற்றுப் பெரிதாக உள்ள சட்டையைக் குறிப்பது. |