ஏ - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஏகாதசர் | ஏகாதசருத்திரர். எண்வசுக்க ளேகாதசர்கள் (தேவா. 1040, 5). |
| ஏகாதசருத்திரர் | மாதேவன் |
| ஏகாதசி | பதினோராந்திதி. |
| ஏய்ப்ப | ஓர் உவமவுருபு. (தொல். பொ. 290.) |
| ஏய | ஓர் உவமவுருபு. (தண்டி. 33.) |
| ஏர்ப்ப | ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286, உரை.) |
| ஏர | ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286, உரை.) |
| ஏனம் | Enumerative particle added to ஃ, as in அஃகேனம் |
| ஏனும் | என்றாலும். தாமரை முதலிவற்கேனும் (கந்தபு. காமதகன. 83). |
| ஏக்கம்பிடி | துக்கமிகுதல் |
| ஏக்கறு | இளைத்து இடைதல். கடைக்க ணேக்கற (சீவக. 1622) |
| ஏக்கெறி | கவலை யொழிதல் |
| ஏகமாயிரு | ஒன்றாயிருத்தல். நானேகமாய் நின்னோடிருக்குநாளெந்தநாள் (தாயு. எங்கு நிறை. 6) |
| ஏகு | போதல். தாய்த் தாய்க்கொண் டேகுமளித்திவ் வுலகு (நாலடி, 15) |
| ஏகோபி | ஒன்றுபடுதல். ஏகோபித்து முளைத்துக்கொண்டார் (இராமநா. உயுத்த. 88.) |
| ஏங்கிப்போ | ஏக்கம்பிடித்தல். தாயைப் பிரிந்ததனால் குழந்தை ஏங்கிப்போயிற்று |
| ஏங்கு | ஒலித்தல். குன்றினின் றேங்கு மருவி (திருக்கோ. 148) |
| ஏச்சுக்காட்டு | பழிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசுதல் |
| ஏசறு | வருத்தமுறுதல். (அகநா. 32.) |
| ஏசு | இகழ்தல். ஏசவெண்டலையிற்பலிகொள்வதிலாமையே (தேவா. 425, 6) |