ஏ - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஏகவடம் | ஏகாவலி. பொங்கிளநாகமொ ரேகவடத்தோடு (தேவா. 350, 7). |
| ஏகவல்லி | ஏகாவலி. (பெருங். உஞ்சைக். 46, 211.) |
| ஏகவாசம் | தனிமையாயிருக்கை |
| ஏகவாணை | பொதுவற ஆளுகை. ஏகவாணை வெண்குடை (சீவக. 141.) |
| ஏகவாரம் | ஒருபோது. இன்று ஏகவாரந்தான் உணவு. |
| ஏகவிடுகொடி | ஏகாவலி. ஏகவிடுகொடி யெழிற்றோ ளெழுதி (பெருங். உஞ்சைக். 34, 201). |
| ஏகவீரன் | தனிவீரன். (திவ். திருவிருத். 13, வ்யா.) |
| ஏகவீரியன் | வீரபத்திரன். (பிங்.) |
| ஏகவெளி | பெருவெளி |
| ஏகவேணி | ஒற்றைச் சடையுடைய மூதேவி. (பிங்.) |
| ஏகாக்கிரசித்தம் | ஒன்றிலே ஊன்றிய மனம். ஏகாக்கிரசித்தமென்னும் விரதங்கெடாத திடவிரதம் (சிவப். பிரபந். அபிஷே. 8). |
| ஏகாக்கிரதை | ஒன்றிலே மனம் பதிந்திருக்கை |
| ஏகாகம் | இறந்தவர்க்குப் பதினோராநாளிற்செய்யுங் கிரியை |
| ஏகாகி | தனித்திருப்போன் |
| ஏகாங்கநமஸ்காரம் | தலைவணங்கிச் செய்யும் நமஸ்காரம். (சங். அக.) |
| ஏகாசம் | உத்திரீயம். ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற்றோண்மே லேகாசமா விட்டு (தேவா. 257, 3). |
| ஏகாட்சரம் | நூற்றெட்டுபநிடங்களுள் ஒன்று. |
| ஏகாட்சரி | ஓரெழுத்தாலாய மந்திரம். |
| ஏகாட்சி | ஒற்றைக்கண் +(ணன்,ணி) |
| ஏகாண்டம் | முழுக்கூறு. ஏகாண்டமான தூண். |