ஏ - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஏக்கழுத்து | ஏக்கழுத்தம் |
| ஏக்கர் | 43, 560 சதுர அடிகொண்ட நிலவளவை |
| ஏக்கரா | ஏக்கர் |
| ஏக்கறவு | இச்சை |
| ஏக்கன்போக்கன் | ஒன்றுக்குமுதவாதவன் |
| ஏககுடும்பம் | பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம் |
| ஏகசக்கரவர்த்தி | தனியாணை செலுத்துவோன் |
| ஏகசக்கராதிபத்தியம் | தனியரசாட்சி |
| ஏகசக்கராதிபதி | ஏகசக்கரவர்த்தி |
| ஏகசகடு | மொத்தம் |
| ஏகசுபாவம் | ஒரே தன்மை |
| ஏகத்துவம் | ஒன்றாயிருக்குந் தன்மை. ஏகத்துவத்திலே சுழுத்தி யிதயமுற் றின்பமே பெறுவாய் (ஞானவா. தாசு. 101). |
| ஏகத்தொகை | முழுத்தொகை |
| ஏகதண்டி | திரிதண்டி |
| ஏகதார் | ஒரு தந்தியுடைய வாத்தியம். |
| ஏகதாரவிரதன் | ஒருத்தியையே மனைவியாக்கொள்ளும் உறுதியுள்ளவன். (ஈடு. 4, 2, 8.) |
| ஏகதாளம் | சத்ததாளத்தொன்று. ஏகதாளத்துக் கிலகுவொன்றாமே (பரத. தாள. 24.) |
| ஏகதேசவறிவு | சிற்றுணர்வு. ஏகதேசவறிவைச் செய்தல் ஏகதேசப்படுந் தகுதியையுடைய பொருட்கேயன்றி ஏனையதற்குரித்தன்று (சி. சி. 1, 41, சிவஞா.) |
| ஏகதேசவுருவகம் | ஒரு பொருளின் ஏகதேசத்தை உருவகப்படுத்தும் உருவகவணி. (குறள், 24, உரை.) |
| ஏகதேசி | ஓரிடத்திருப்புடையது. இவ்வைங்கோசங்களில் ஏகதேசியாய்ப் போக்குவரவு செய்துநிற்கும் (சி. சி. 4, 23, சிவஞா.) |