ஆ - வரிசை 25 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஆதிநாதன்

கடவுள், சிவன்

ஆதிநாராயணன்

வச்சிக்கல், திருமால்

ஆதிபுங்கவன்

அருகன், கடவுள்

ஆதிரன்

பெரியோன்

ஆத்தன்

கடவுள், விருப்பமானவன், நம்பத்தக்கவன், அருகன்

ஆயிரங்கண்ணன்

இந்திரன்

ஆர்வலன்

அன்புடையவன்

ஆலகண்டன்

சிவன்

ஆலமுண்டோன்

சிவபெருமான்

ஆழ்வார்

திருமால் அடியார், பக்தியில் ஆழ்ந்தவர்

ஆங்காரம்

அகங்காரம்

ஆதானும்

எதுவாயினும். ஆதானும் செய்ய (திவ்.இயற்.பெரியதிருவ.25).

ஆயவன்

அத்தகையவன். ஆயவனோர் பகல். (கம்பரா.திருவவ. 1).

ஆவர்

ஆவரிவை செய்தறிவார் (திவ். பெரியதி.3, 3, 7).

ஆத்தாடி

ஆச்சரியக் குறிப்பு
இளைப்பாறற் குறிப்பு

ஆகாதே

அல்லவா௯ அவன் கழல்கண்டு களிப்பன வாகாதே (திருவாச. 49, 1).

ஆமா

See ஆமாம்.

ஆது

பாகர் யானையைத் தட்டிக்கொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.)

ஆவ

இரக்கக்குறிப்பு. நாயினேனை யாவவென் றருளுநீ (திருவாச. 5, 74).
அபயக்குறிப்பு. நஞ்ச மஞ்சி யாவ வெந்தாயென் றவிதாவிடு நம்மவர் (திருவாச. 5, 4).

ஆஅ

அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.)