ஆ - வரிசை 2 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆகக்கூடி | ஆக்மொத்தம் |
| ஆகட்டும் | சரி என்ற பொருளில் வாக்கியங்களைக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கும் இடைச்சொல் |
| ஆகமம் | சைவம்,வைணவம் முதலிய சமயங்களின் புனித நூல்கள் |
| ஆகவும் | மிகவும் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல் |
| ஆகவும் | மிகவும் |
| ஆகவே | அதன் காரணமாக |
| ஆகா | வியப்பு,பாராட்டு,ஏளனம் போன்ற உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் இடைச்சொல் |
| ஆகாத்தியம் | (விருப்பமில்லாத)ஒன்று நடக்கும்போது ஒருவர் செய்யும் அழுகையோடு கூடிய ஆர்ப்பாட்டம் |
| ஆகாது | கூடாது |
| ஆகாயக்கோட்டை | ஒருவர் தான் நினைக்கும் காரியம் நடக்காது என்று தெரிந்தும் அதை பற்றிப் பெரிய அளவில் செய்யும் கற்பனை |
| ஆகாயத்தாமரை | 1.குளம் குட்டைகளில் படர்ந்து காணப்படும் வெளிர் மஞ்சள் நிறத்தில் பூக்கும் வட்ட அடுக்கில் இலைகளைக் கொண்ட தண்டுகளற்ற மிதக்கும் பூண்டு வகை 2.ஒரு வகைத் தாவர ஒட்டுண்ணி |
| ஆகாரம் | (திட அல்லது திரவ)உணவு |
| ஆகிய | பட்டியலாகக் குறிப்பிட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதைக் காட்டி அவற்றை வாக்கியத்துடன் தொடர்பு படுத்தும் இடைச்சொல் |
| ஆகிருதி | (பெரும்பாலும் ஆண்களைக் குறித்துவரும்போது)உடம்பு |
| ஆகிவந்த | மங்கலமான காரியங்கள் பல நடந்ததால் மிகவும் ராசியானது என்று நம்பப்படும்(வீடு,இடம்) |
| ஆகுதல் | ஆவது என்ற பொருளில் வரும் இடைச்சொல் |
| ஆகுதி | யாகத்தில் வளர்க்கும் தீயில் இடப்படும் பொருள் |
| ஆகுபெயர் | ஒன்றன் பெயர் அதனுடன் தொடர்புடைய மற்றொன்றுக்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர் |
| ஆகையால் | ஆகவே |
| ஆங்காங்கு | அங்கங்கே |