ஆ - வரிசை 4 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஆசாரம் | இலிங்கா சாரம் |
| ஆசாரி | தச்சுத் தொழில் செய்பவன்/இரும்பு அல்லது பொன் வேலை செய்பவர் |
| ஆசாரியர் | ஆன்மீக குரு |
| ஆசான் | ஆசிரியர் |
| ஆசி | ஆசீர்வாதம் |
| ஆசிரமம் | முனிவர் அல்லதுஆன்மிக நெறியில் ஈடுபட்டோர் வாழும் இடம் |
| ஆசிரமம் | பிரமசரியம் |
| ஆசிரியர் | கல்வி,கலை போன்றவற்றைக் கற்பிப்பவர் |
| ஆசிரியர் உரை | தலையங்கம் |
| ஆசிரியை | பெண் ஆசிரியர் |
| ஆசீர்வதி | சீரும் சிறப்பும் நன்மையும் பெறுமாறு வாழ்த்துதல் |
| ஆசுகவி | பாடவேண்டிய பொருளைக் கொடுத்த உடனேயே செய்யுள் இயற்றும் புலமை பெற்ற புலவர் |
| ஆசுவாசம் | ஆறுதல் |
| ஆசை | அவா |
| ஆசைகாட்டு | (ஒருவரை ஏமாற்றும் நோக்கத்தோடு) ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வைத் தருதல் |
| ஆசைநாயகன் | திருமணமான பெண் (கணவன் அல்லாது)தன் இச்சைக்கு வைத்திருக்கும் ஆண் |
| ஆசைநாயகி | திருமணமான ஆண் (தன் மனைவி அல்லாது)தன் இச்சைக்கு வைத்திருக்கும் பெண் |
| ஆசைப்படு | (ஒன்றை செய்ய அல்லது பெற) விரும்புதல் |
| ஆசை வார்த்தை | (ஒருவரை ஏமாற்றும் நோக்கத்தோடு அவரது)விருப்பத்தை அல்லது ஆவலைத் தூண்டும் விதத்தில் பேசப்படும் வார்த்தைகள் |
| ஆட்குறைப்பு | வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் |