அ - வரிசை 83 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அம்மோ | இரக்கக்குறிப்புச் சொல். (நாமதீப.) |
| அட்டம் | எட்டு. அட்ட மாம்புய மாகுமா ரூரரே (தேவா. 709,7) |
| அஃகரம் | வெள்ளெருக்கு |
| அஃகான் | அ என்னும் முதல் எழுத்து |
| அஃகுல்லி | பிட்டு |
| அஃபோதம் | (நிலாமுகி)நிலாமுகிப்புள் |
| அகக்கடவுள் | உயிர்க்குள்ளிறைவன் |
| அகங்கரி | இறுமாக்க. |
| அகசு | பொழுது |
| அகச்சுட்டு | அ, இ and உ |
| அகடம் | அநீதி |
| அகடனம் | செய்யப்படாதது. |
| அகடு | பொல்லாங்கு |
| அகணி | உள் |
| அகணிதம் | கணக்கின்மை |
| அகண்டம் | அபின்னம் |
| அகண்டிதம் | முழுமை |
| அகத்திணை | அகத்துநிகழொழுக்கம். |
| அகத்தியம் | ஓர் இலக்கண நூல் |
| அகத்தியன் | அகஸ்தியன் |