அ - வரிசை 81 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அவையிற்றின் | அவற்றின்.அவையிற்றின் மேலு மறைவர் (சி.சி.அளவை.1). |
| அன்னவன் | அத்தன்மையன். (நைடத.அன்னத்தைக்க.3). |
| அன்னன் | அப்படிப்பட்டவன். |
| அன்னான் | அன்னவன். |
| அனையன் | அன்னவன். (கம்பரா.வனம்பு.38.) |
| அனை | அந்த |
| அஃகம் | அஃகம் சுருக்கேல் "அஃகமும் காசும் சிக்கெனத் தேடு"(ஔவை.) |
| அஃகு | குறை |
| அஃகேனம் | மூன்று புள்ளி (ஃ) வடிவாக வரும் ஆயுத எழுத்து |
| அஃதே | அப்படியா! அஃதே யடிகளு முளரோ(சீவக.1884). |
| அக்கட | ஓர் ஆச்சரியக்குறிப்பு. அக்கட விராவணற் கமைந்த வாற்றலே (கம்பரா.யுத்.மந்திர.32) |
| அடா | அடா பித்த (இராமநா. சுந்தர. 27). |
| அடே | See அடா. |
| அடேயப்பா | ஆச்சரியக் குறிப்பு. |
| அப்பாடி | See அப்பாடா. |
| அம்மாடி | அதிசய விரக்க விசிராந்திக் குறிப்பு. |
| அகோ | ஆச்சரியம், துக்கம், இகழ்ச்சி என்றிவற்றை யுணர்த்தும் குறிப்புமொழி. மண்டலத்தின் மிசையொருவன் செய்த வித்தை யகோவெனவும் (தாயு.மண்டல.1). |
| அந்தகோ | இரக்கச்சொல். அந்தகோவிது வருவதே யெனக்கு (வேதாரணி. பிரமசா. 22). |
| அம்மகோ | ஓர் இரக்கக் குறிப்பு. அம்மகோவெனும் விழுமழும் (குமர. பிர. மதுரைக்கல. 14) |
| அவுக்கவுக்கெனல் | விரைவுக்குறிப்பு. |