அ - வரிசை 249 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அம்புலோதி | பொறாமையுடன் சேர்ந்த ஆசை |
| அம்புறோஸ் | பொய்மை உண்மை போல் திரித்து கூறும் நபர் |
| அம்மட்டிற்கும் | அதுவரைக்கும் |
| அம்மணக்குண்டி | ஆடையேதுமின்றி குறிப்பாக சிறுபிள்ளைகள் இருத்தலைக் குறிக்கும் முறை |
| அம்மணம் பேசுதல் | தூஷணம் |
| அம்மம்மாக் குழல் | சிறு பிள்ளைகளின் விளையாட்டு ஊதுகுழல் |
| அம்மல் | மேகம் மந்தாரமாயிருத்தல், தடிமன், தலைப்பாரம் |
| அம்மாக்காறி | இன்னொருவரின் தாயை குறிப்பிடும் முறை |
| அம்மா சுண்டல் | கடினமான சூழ்நிலையினை எதிர்நோக்குவதற்கு தன்னையும் மற்றவர்களையும் உற்சாகப்படுத்த கூறப்படும் வார்த்தை, ஆச்சரியக் குறிப்பு |
| அம்மாவான | தாய் மேல் சத்தியமாக |
| அம்மாள் நோய் | சின்ன முத்து, கொப்பளிப்பான், கூகைக்கட்டு |
| அம்மாளாச்சி | அம்மன் |
| அம்மிக்கறி | அம்மியில வைத்து அரைத்து தயாரிக்கப்படும் சம்பல், பச்சடி முதலிய தொடுகறிகள். |
| அம்மையா | தாயின் தகப்பன் |
| அமசடக்கி | விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் தனக்குள் வைத்திருக்கும் நபர். |
| அமத்திக்கொண்டு போ | விரைவாக வாகனத்தை செலுத்திக் கொண்டு போதல் |
| அமத்தி வாசி | விடயமொன்றை விபரமாகக் கூறாமல் தந்திரமாகக் குறிப்பிடுவதன் மூலம் மற்றவர்களின் கவனம் அதன் மேல் செல்லாமலும், கோவப்படாமலும் பார்த்துக் கொள்ளல் |
| அமத்தி வைச்சிரு | மற்றவர்களிற்கு தெரியாமல் |
| அமந்தறை | மும்மரம் |
| அமவாசை இருட்டு | அதிக இருள் |