அ - வரிசை 215 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அருத்தநாரீசுவரன் | உமையொரு பாகன் |
| அலரவன் | நான்முகன் |
| அவநிகேள்வன் | திருமால் |
| அழல்வண்ணன் | சிவன் |
| அறவாணன் | கடவுள் |
| அறன்மகன் | தருமன் |
| அறிவன் | நல்லறிவுடையோன், இறைவன், சிவன், திருமால், அருகன் |
| அறிவாகரன் | மிகுந்த கல்வி அறிவை உடையவன் |
| அற்புதமூர்த்தி | கடவுள் |
| அனிவன் | வாயுதேவன் |
| அன்பரசன் | பணிவுள்ளம் கொண்டவன் |
| அன்பழகன் | அன்புடைய அழகன் |
| அகராதிக்கிரகம் | அகரம் முதலாக வரும் முறை |
| அக்னி | நெருப்பு, தீ |
| அபிடேகம் | திருமுழுக்கு |
| அபூர்வ | அரிய |
| அர்ப்பணிக்கிறேன் | உரித்தாக்குகிறேன் |
| அதிர்ஷ்டவசமாக | நல்லவேளையாக |
| அட்சயபாத்திரம் | அருகாக்கலம் |
| அனந்த சயனம் | அறிதுயில் |