ந - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| நாகங்கள் | அனந்தன் |
| நாடி | வாதம் |
| நாடிகள் | அத்தி |
| நாற்பொன் | ஆடகம் |
| நட்சத்திரங்கள் | அசுவினி |
| நரகம் | அள்ளல் |
| நவமணிகள் | மாணிக்கம் |
| நவ பாடாணம் | சாதிலிங்கம் |
| நிதி | கச்சப நிதி |
| நூற்பயன் | அறம் |
| நை | வருந்து |
| நொ | நொண்டி |
| நாழிகை | ஒரு நாளின் அறுபதில் ஒரு பகுதி நேரம். பண்டைத்தமிழர் இந்த நேர அளவீட்டையே கைக்கொண்டனர். இன்றைய 24 நிமிடங்களுக்குச் சமனானது.பகல் 30 நாழிகை இரவு 30 நாழிகை என்பது கணக்கீடு. |
| நல்குரவு | வறுமை என்பதற்கான பழைய தமிழ்ச்சொல். இல்லாமை, ஏழ்மை என்பன ஒத்த கருத்துச் சொற்களாகும் |
| நரலுதல் | ஒலி எழுப்புதல் |
| நரல்வது | ஒலியெழுப்புவது. (நர நர எனப் பல்லைக் கடித்தான்) |
| நரலை | ஒலி; ஒலி எழுப்பும் கடல் |
| நரற்றுதல் | ஒலி எழுப்புதல் |
| நருமுதல் | பல்லால் கடித்தல் |
| நரன் | நரலும் குரங்கு அதாவது \'நரன்\' - மனிதன் |