ந - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| நாயகன் | தலைவன் |
| நட்சத்திரம் | விண்மீன் |
| நட்டம் | இழப்பு |
| நாசி | மூக்கு |
| நதி | ஆறு |
| நவம் | ஒன்பது |
| நாமம் | பெயர் |
| நவீனம் | புதுமை; புதினம் |
| நாராசம் | காதுக்கு இனிமையில்லாத சொல் |
| நிஷ்டை | தியானம். |
| நிஷ்டூரம் | கொடுமை. |
| நிஷ்காமியம் | ஆசையற்ற தன்மை : தன்னலம் கருதாமை. |
| நிஷ்களங்கம் | களங்கமற்றது. |
| நிர்மூலம் | வேரறப்பு |
| நையாண்டி | பிறர் குறையை நகைச்சுவையாக உரைத்தல். |
| நீங்கள் | முன்னிலைப் பன்மைப்பெயர். நூலவையார் போனீங்க ணோக்குமினே (சீவக.1045) |
| நுங்கள் | நீங்கள் என்பது வேற்றுமையுருபேற்கும்போது அடையும் உருவம். நுங்கட்கு (திவ். திருவாய். 8, 2, 1). |
| நாம் | தன்னுடன் இருப்பவர்களைக் குறிக்கும் சொல், |
| நீம் | முன்னிலைப்பன்மைப்பெயர். நீமே வென்றிக் களிற்றானுழைச் செல்வது வேண்டு மென்றான் (சீவக.1932). |
| நும் | வேற்றுமையுருபிற்குமுன் நீயிர் என்ற முன்னிலைப்பன்மை கொள்ளு முருவம். நும்மெனிறுதி யியற்கை யாகும் (தொல். எழுத். 187). |