த - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| திருமேனி | கோவில்களில் உள்ள கடவுள் சிலை. |
| திருவாய் மலர்தல் | ஞானிகள் உபதேசித்தல். |
| திருஷ்டி பரிகாரம் | ஒன்றின் சிறப்பினைக் குறைக்குமாறு செய்யும் குறைபாடு. |
| தில்லு முல்லு | முறையற்ற வழி முறை. |
| திவால் | தொழிலில் இழப்புண்டாகி அழிவு கொள்வதால் காணப் பெறும் ஏழ்மை நிலை. |
| தென்னை | இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. |
| தும்பை | வெண்மையான நிறத்தையுடைய ஒருவகை மலராகும். |
| தாமரை | சதுப்பு நிலத்திலும், குளம் குட்டைகளிலும் வளரும் தாமரை என்னும் ஓரு மலர்க் கொடி. |
| திருநீற்றுப் பச்சிலை | கரந்தை |
| துளசி | துளசி ஒரு மூலிகைச் செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. |
| தூதுவளை | சிங்கவல்லி |
| தாதி | வேலைக்காரி, பணிப்பெண், செவிலித்தாய், வேசை, பரணி, வாதி |
| தந்திரம் | உபாயம், உத்தி , யுக்தி |
| தொடங்கு | ஆரம்பி |
| தூமை | பெண்டிர் மாதவிலக்கின் போது வெளிப்படும் உதிரம் |
| தன்மை | பிரதிப்பெயர் சொற்கள்(pronoun) பயன்படுத்தும் போது, மூவிடங்களுள் தன்னை குறிக்கும் இடம். |
| தகுதி | தரம் |
| தவறான | தீமையான |
| தவறு | மற்றவருக்குச் செய்யும் தீமை அநீதி |
| திருப்பு | திசைமாற்று |