க - வரிசை 79 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| கும்பசன் | அகத்தியன் |
| குயிலன் | தேவேந்திரன் |
| குருநாதன் | முருகக்கடவுள், பரமகுரு |
| குருபரன் | பரமகுரு |
| குலசன் | ஒழுக்கமுடையவன், குலம் வழுவாத தாய்தந்தையரிடத்தில் பிறந்தவன் |
| குலமகன் | நற்குடியிற் பிறந்தவன் |
| குலிசபாயணி | கந்தன், தேவேந்திரன் |
| குலிசன் | இந்திரன் |
| குலிசி | இந்திரன் |
| குழகன் | சிவன், முருகன், இளையோன், அழகன் |
| குழக்கன் | சிவன் |
| கேகயன் | கைகேயன், கேகய நாட்டு அரசன், கைகேயி தந்தை, சிபிச்சக்கரவர்த்தி |
| கேசன் | தண்ணீரில் இருப்பவன், வருணன், திருமால் |
| கேசிகை | திருமால் |
| கேதாரன் | சிவன் |
| கேத்திரன் | திருமால், விண்டு, நாராயணன் |
| கேத்திரபாலன் | ஷேத்திரத்தைக் காக்கும் தேவதை, வயிரவன் |
| கைலையாளி | சிவன் |
| கோதமனார் | ஒரு முனிவர், கடைசிச் சங்கப் புலவர்களுள் ஒருவர் |
| கோபதி | இந்திரன், சூரியன், சிவன் |