க - வரிசை 104 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| கூழைக்கும்பிடு | மரியாதைகாட்டுவதுபோல்நடித்தல் |
| கடுக்காய் கொடுத்தல் | ஏமாற்றி தப்புதல் |
| கண்ணும் கருத்தும் | முழுக் கவனத்துடன் |
| கரி பூசுதல் | அவமானம் ஏற்படுத்துதல்/மதிப்பைக் கெடுத்தல் |
| கரைத்துக் குடித்தல் | ஒரு கவலையை அல்லது துறையைப் பற்றி முழுக்க படித்து அறிதல் |
| காது குத்துதல் | சாமார்த்தியமாகப் பொய் சொல்லுதல் |
| கிணற்றுத் தவளை | தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன் |
| குரங்குப் பிடி | பிடிவாதம்/பற்றிக்கொண்டதைச் சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மை |
| கை கழுவுதல் | உதவி செய்வதிலிருந்து அல்லது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுதல் |
| கை கூடுதல் | ஒரு காரியம்/ செயல் நிறைவேறுதல் |
| கையும் களவுமாய் | குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே |
| காமினி | பெண் |
| கேலி | பகிடி |
| கஸ்டம் | துன்பம் |
| கட்சி | அணி |
| கங்கணம் | உறுதி (பூணல்) |
| காந்தள் | கார்த்திகைப்பூ |
| காமக்கடப்பு | காமமிகுதி |
| காமப்பைத்தியம் | அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம் |
| காமாந்தகன் | காமத்தால் விவேகமற்றவன் |