ஏ - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஏவன் | யாவன் |
| ஏ | ஒரு விளிக்குறிப்பு. ஏயெம்பெருமான் (தேவா. 746, 7). |
| ஏ | உயர்வு |
| ஏடா | தோழன் தாழ்ந்தோன் இவர்களை விளித்தற்கண் வரும் இடைச்சொல். (மணி. 14, 12). |
| ஏடி | தோழி முதலிய பெண்பாலாரை விளித்தற்கண்வரும் இடைச்சொல். |
| ஏயே | பரிகாசக் குறிப்பு. (திவா.) |
| ஏலேலம் | See ஏலேலோ. |
| ஏலேலோ | படகுமுதலியன தள்ளுவோர்பாடும் ஏலப்பாட்டில் வரும் ஒருசொல். |
| ஏனை | மற்றை. (சூடா.) |
| ஏகப்பட்ட | மிகுதியான |
| ஏனென்றால் | நான்அப்படிச்சொல்லுவது ஏனென்றால். |
| ஏரிண்வாணர் | See ஏரின்வாழ்நர். (திவா.) |
| ஏற்ப | ஓர் உவமவுருபு. (தண்டி. 33) |
| ஏககாயனி | ஒரு வருடத்துக் கடாரி. |
| ஏககுரு | உடன்கற்றோன். |
| ஏகசர்க்கிரவர்த்தி | சுயாதிபதி, கடவுள். |
| ஏகசக்கிராதிபதி | ஏகசக்கிரவர்த்தி. |
| ஏகசமன் | ஒருசரி |
| ஏகசாம் | காண்டாமிருகம். |
| ஏகசாதர் | சகோதரர். |