ஈ - வரிசை 15 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| ஈற்றேறுதல் | பயிர்க்கரு முதிர்தல் |
| ஈனசுரம் | தாழ்ந்த குரல் |
| ஈனதை | இழிவு |
| ஈனமாந்தர் | அற்பர் |
| ஈனமாந்தர் | அற்பர் |
| ஈனவன் | இழிந்தோன் |
| ஈனக்குமரி | மகப் பெறாத இளம் பெண் |
| ஈனில் | கருவுயிர்க்கும் இடம் |
| ஈனுதல் | பெறுதல் |
| ஈனும் | பெறும் |
| ஈனை எழுதுதல் | சித்திரக் குறிப்பு வரைதல் |
| ஈன்றணிமை | அண்மையில் ஈனப்பட்டமை |
| ஈன்றார் | தாய் தந்தையர் |
| ஈன்றான் | தந்தை |
| ஈகையாளன் | கொடையாளன் |
| ஈசத்துவம் | யாவர்க்கும் தேவனாதல் |
| ஈசானன் | வடகிழக்குத் திக்குப் பாலகன் |
| ஈசுரமூலி | பெரு மருந்துக் கொடி |
| ஈசுவர | ஒரு தமிழ் ஆண்டு |
| ஈச்சுரம் | சிவதத்துவம் ஐந்தனுள் ஒன்று |