அ - வரிசை 38 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அர்ப்பணம் | ஈகை,தற்கொடை |
| அர்ப்பணிப்பு | உயர்ந்த நோக்கங்களில் ஒருவர் முழுமையாகக் கொண்டுள்ள தீவிர ஈடுபாடு |
| அரக்கப் பரக்க | அவசரம் அவசரமாக |
| அரக்கன் | (அன்பு,இரக்கம் போன்ற மென்மையான உணர்வுகள் அற்ற)கொடியவன் |
| அரக்கி | (அன்பு,இரக்கம் போன்ற மென்மையான உணர்வுகள் அற்ற)கொடியவள் |
| அரக்கு | முத்திரையிடப் பயன்படும் கருஞ்சிவப்பு மெழுகு |
| அரக்கு | நகர்தல், தரையோடு சேர்த்து நகர்தல் |
| அரக்குழா | வஞ்சிரம் |
| அரங்கம் | மேடை |
| அரங்கேற்றம் | ஒரு புதிய கலைப் படைப்பைப் பார்வையாளர்களின் முன் முதல் முறையாக அளிக்கும் நிகழ்ச்சி |
| அரங்கேற்று | அரங்கேற்றம் செய்தல் |
| அரங்கேறு | அரங்கேற்றம் நிகழ்தல் |
| அரசகரும மொழி | ஆட்சிமொழி |
| அரச துறை | அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறை |
| அரச படை | அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இராணுவம் ,காவல்துறை போன்ற படை பிரிவு |
| அரசமரம் | (ஆலமரத்தின் குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு வகை மரம் |
| அரசல் புரசலாக | அரைகுறை நிலையில்,முழு விவரத்துடன் இல்லாமல் |
| அரசவர்த்தகமானி | அரசிதழ் |
| அரசவைக் கவிஞர் | அரசால் நியமிக்கப்பட்டு அரசுக்கும்,அரசு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், கவிதைகலை எழுதித் தரும் கவிஞர் |
| அரசன் | மன்னன் |