அ - வரிசை 32 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அபிநயம் | நாட்டியத்தில் களம்,கருத்து,காலம் முதலியவற்றை முகபாவத்தாலும் உடல் உறுப்புகளாலும் உணர்ச்சியோடு வெளிப்படுத்துதல் |
| அபிநயி | ஆடல் கலையில் உடல் உறுப்புகளை உணர்ச்சியோடு அசைத்தல் |
| அபிப்பிராய பேதம் | கருத்து வேற்றுமை |
| அபிப்பிராயம் | கருத்து(ஒருவருடைய சொந்தக் கருத்து) |
| அபிமானம் | நன்மதிப்பு,உயர்வான எண்ணம் |
| அபிமானி | (ஒருவரின் அல்லது ஒன்றின்) நலனில் ஆர்வமுள்ளவர் |
| அபிவிருத்தி | வளர்ச்சி |
| அபின் | ஒரு வகை போதைப் பொருள் |
| அபூர்வம் | அருமை |
| அபூரிதக் கரைசல் | கலக்கப்படும் பொருளைத் தொடர்ந்து கரையவிடும் திரவம் |
| அபேட்சகர் | வேட்பாளர் |
| அம்சம் | 1.பல பகுதிகளாக அல்லது பன் முகமாக உள்ளவற்றில் குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி 2.எடுத்துக் கூறும்படியாக இருக்கும் கூறு அல்லது தன்மை 3.லட்சணம்,கச்சிதம் |
| அம்பலம் | (ரகசியமாக இருக்க வேண்டியது) வெளியாகிவிட்ட நிலை |
| அம்பலம் ஏறு | (இதுவரை வெளிப்படாமல் இருந்த ஒன்று)பலரும் அறியும்படி வெளிப்படுதல் |
| அம்பலவி | மஞ்சள் நிறத் தோலுடன் நுனி வளைந்து நீளமாகவும் சதைப்பற்றோடும் இருக்கும் ஒரு வகை மாம்பழம் |
| அம்பறாத்தூணி | (முதுகில் தொங்கவிட்டு)அம்பு வைத்துக்கொள்ளும் கூம்பு வடிவக் கூடு |
| அம்பாரம் | (பொருள்களின் )பெரும் குவியல் |
| அம்பாரி | யானை மேல் அமர்ந்து செல்வதற்கான,பெட்டி போன்ற அமைப்புடைய இருக்கை |
| அம்பாள் | அம்மன்,அம்பிகை,கோவிலில் பார்வதியைக் குறிக்கும் பொதுப்பெயர் |
| அம்பு | வில்லின் நாணில் வைத்து எய்யப்படும் கூரிய முனை உடைய ஆயுதம் |