அ - வரிசை 169 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அரணிய | அரணையுடைய |
| அரணியகதலி | காட்டுவாழை. |
| அரணியசடகம் | காட்டுக்கவுதாரி. |
| அரணியசாரணை | காட்டிஞ்சி. |
| அரணியவரணி | பெருங்காடு. |
| அரணியானி | பெருங்காடு. |
| அரணிருக்கை | கோட்டை. |
| அரதேகி | அகதேதி. |
| அரதைப்பெரும்பாழி | ஒருதலம். |
| அரத்தகம் | செம்பஞ்சு. |
| அரத்துறை | ஒரு சிவஸ்தலம். |
| அரத்தோற்பலம் | செங்கழுநீர், செங்குவளை. |
| அரபீசம் | பாதரசம். |
| அரப்பள்ளியான் | சர்ப்பசயனனாகியவிட்டுணு. |
| அரப்பிரியை | உமாதேவி. |
| அரமி | கடுக்காய். |
| அரரி | கதவு. |
| அரரு | சத்துரு. |
| அரவக்கிரி | வேங்கடமலை. |
| அரவக்கொடியோன் | துரியோதனன். |