வ - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| வரவு வைக்காதே | பொருட் படுத்தாதே. |
| வராண்டா | நடைவழி : முற்றம். |
| வரிந்து கட்டிக் கொண்டு | தீவிரமாக. |
| வரும்படி | வருமானம். |
| வர்த்த மானம் | வரலாறு : முழுவிவரம். |
| வலுக்கட்டாயமாக | வற்புறுத்துதல் தன்மை. |
| வலக்கரம் | பக்க பலம். |
| வழிக்குக் கொண்டு வா | நன்னெறியில் நிற்கச் செய். |
| வளவள என்று | மிகுதியாக. |
| வளைத்துப் போடு | தன் வயப்படுத்து. |
| வள்ளு வள்ளென்று | எரிச்சல் காட்டும் குறிப்பு. |
| வஜா | வரி நீக்கம். |
| வஸ்தாது | திறமை மிக்கவன். |
| வஸ்திர காயம் | பொடியாக்குதல். |
| விக்னேசுவரர் | பிள்ளையார் |
| வைவஸ்வதி | தென்திசை |
| வைவாகிகம் | (விவாகம்)விவாகத்திற்குரியது. |
| வ்ருஜநம் | தலை மயிர் |
| வைநாசிகம் | ஓர் யோகம். |
| வைரூப்பியம் | அவலட்சணம் |