க - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| கும்பன் | அகத்தியன், பிரகலாதன் பிள்ளைகளுள் ஒருவன் |
| குலீனன் | உயர்குலத்தோன் |
| கேசரர் | வித்தியாதரர் |
| கேசவன் | சோழன், நிறைமயிருள்ளோன், திருமால், சிவன் |
| கேசிகன் | திருமால் |
| கேத்திரி | திருமால், விண்ணு, நாராயணன் |
| கொன்றைசூடி | சிவன் |
| கோவலன் | இடையன், கண்ணன், சிலப்பதிகாரக் காப்பியத்தலைவன் |
| கோவிந்தன் | இந்திரன், நான்முகன், திருமான், பரமான்மா |
| கௌசிகன் | இந்திரன், ஒரு முனிவர், விசுவாமித்திரர், பாம்பாட்டி |
| கௌதமன் | ஆதிபுத்தன், கிருபன், சதாநந்தர் |
| கௌரியன் | பாண்டியன் |
| கைராசி | நன்மை தரும் பேறு. |
| கைநாட்டு | எழுதப் படிக்கத் தெரியாதவன் |
| கைக்கூலி | தன்னுடைய நலனை எண்ணிப் பிறர் சொற்படி கேட்பவன். |
| கேவலம் | இழிவு(னது) |
| கெடுபிடி | கடுமையாக ஆணையிடுதல். |
| கூனு | வளைந்த உடலமைப்பு. |
| கூப்பாடு | ஒன்றைக் கூறும் வகையில் உரத்துக் குரல் எழுப்புதல். |
| கும்மாளம் | மகிழ்ச்சி ஆரவாரம். |