உ - வரிசை 79 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| உடற் குறை | குறள் |
| உண்மைப் பொருள் | பதி |
| உபதாதுக்கள் | சுவர்ணமாட்சிகம் |
| உப தாளம் | ஆதி தாளம் |
| உப புராணம் | நாரசிங்கம் |
| உப வேதம் | ஆயுர் வேதம் |
| உன்னாணை | யாழ்ப்பாணப் பேச்சு வழக்குச் சொல்.தான் கூறுவதை எதிர் நிற்பவர் நம்ப வேண்டும் என்பதற்காக அழுத்தம் கொடுக்கும் சொற்பிரயோகம். உன் மீது ஆணையாகச் சொல்கிறேன் என்ற பொருள்படப் பேசப்படுகிறது. உண்ணாணை என்றும் வழங்கப்படுகிறது. |
| உபாத்தியாயர் | ஆசிரியர் |
| உயிரிழப்பு | இறப்பு |
| உடனாளி | கூட்டாளி |
| உறிஞ்சு | இளநீரை உறிஞ்சிக் குடி |
| உறிஞ்சு-தல் | உறிஞ்சும் செயலை உறிஞ்சுதல் என்கின்றோம் |
| உறை கிணறு | மணல் பாங்கான இடத்தில் தோண்டும் போது, மணல் சரிந்து விழாதிருக்க சுடுமண் வலையம் இடப்பெற்ற கிணறு |