இ - வரிசை 89 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| இன்னா | துன்பம் |
| இன்னா | என்ன |
| இடறல் | கால் தடுக்குதல் |
| இடும்பு | செருக்கு |
| இடும்பை | துன்பம் |
| இடைச்சி | முல்லை நிலப் பெண் |
| இடையர் | ஆடு மாடு மேய்க்கும் தொழில் செய்யும் இனத்தார் |
| இடையெழுத்து | இடைநிலை |
| இண்டர் | இடையர் |
| இண்டை | பூமாலை |
| இணர் | பூங்கொத்து |
| இத்துணை | இவ்வளவு |
| இதரன் | அன்னியன் |
| இந்தனம் | விறகு |
| இந்திரகோபம் | (மழைக்குக் பிறகு வெளி வரும்) தம்பலப் பூச்சி |
| இந்திரசாலம் | மாயவித்தை |
| இந்திரவில் | வானவில் |
| இந்திராணி | இந்திரன் தேவி |
| இப்பர் | வணிகரில் ஒரு வகையார் |
| இப்பால் | இவ்விடம் |