இ - வரிசை 74 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| இலக்கணவழக்கு | இலக்கணநடை. |
| இலக்கணவழு | இலக்கணப்பிழை. |
| இலக்கணீயம் | இலக்கணத்தை யுடையது. |
| இலக்காந்தரம் | இடையிலக்கம். |
| இலக்கின சட்டுவருக்கம் | இராசிக் குரியவாறு காரியம். |
| இலக்குமன் | இலட்சுமணன். |
| இலக்குமிபதி | விட்டுணு |
| இலங்காசிகை | நாகப்பூ. |
| இலங்கோசிகை | நாகப்பூ. |
| இலச்சைகெட்டமரம் | கற்றேக்கு. |
| இலட்சயம் | எண்ணத்தக்கது. |
| இலட்சாதிபதி | இலட்சப்பிரபு. |
| இலட்சுமணன் | இராமன்றம்பி. |
| இலண்டன் | முருடன். |
| இலதைவன்னி | கொடு வேலி. |
| இலபித்தம் | பேறு. |
| இலபிப்பு | சித்திப்பு. |
| இலம்போதரன் | விநாயகன் |
| இலயகாலம் | அழிவுகாலம், எலோகரந்தரம். |
| இலக்கியானம் | சங்கீத சிரக்கியானம். |