இ - வரிசை 39 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| இறாட்டணம் | இராட்டினம். |
| இறாட்டுப்பிறாட்டு | ஏதடை, சச்சரவு. |
| இறுகங்கியான் | கையாந்தகரை. |
| இறும்பல் | அதிசயம். |
| இறும்பி | எறும்பு. |
| இறைஞ்சி | மரவுரி. |
| இற்றை | இன்று |
| இனைத்து | இத்தனமைத்து. |
| இன்னாது | தீது. |
| இன்னினி | இப்பொழுது. |
| இந்திரன் | தேவர்கோன் |
| இந்திரை | திருமகள், அரிதாரம், இந்திராணி |
| இந்துசேகரன் | சிவபெருமான் |
| இரகு | சூரியவமிசதரசருள் புகழ்பெற்ற ஓர் அரசன் |
| இரேசன் | அரசன், வாணன், திருமால் |
| இரேவதன் | பலதேவன் மாமன் |
| இருவாம் | நாமிருவரும். இருவாமையனையேத்துவாம் (கலித். 43). |
| இதா | இதோ. மற்றிதா தோன்றுகின்ற (சீவக.1232). |
| இந்தோ | இதோ |
| இத்திஹாத்தான | ஏகோபித்த. இவ்விஷ்யத்தில் ஆலிம்களுக்குள் இத்திஹாத்தன அபிப்பிராயம் இருக்கிறது. |