அ - வரிசை 60 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அனாமத்து | (பொருள்களைக் குறிப்பிடும்போது) யாருக்கு உரிமை என்று தெரியாதது |
| அனிச்சம் | முகர்ந்ததும் வாடிவிடும் என்று (இலக்கியத்தில்) குறிப்பிடப்படும் மென்மையான மலர் |
| அனுக்கிரகம் | அருள்,ஆசி |
| அனுகூலம் | நன்மை |
| அனுங்கு | முனகுதல் |
| அனுசரணை | உறுதுணை |
| அனுசரி | பின்பற்று(தல்) |
| அனுசரித்து | (ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய்,கருத்தில் கொண்டு |
| அனுதாபப்படு | இரக்க உணர்வு கொள்ளுதல் |
| அனுதாபம் | இரக்கம் |
| அனுதாபி | ஆதரவு தருபவர் |
| அனுதினமும் | ஒவ்வொருநாளும்,தினந்தோறும் |
| அனுப்பு | (ஒன்றை அல்லது ஒருவரை)ஓரிடத்துக்குச் சென்றடையச் செய்தல் |
| அனுபந்தம் | பினினிணைப்பு,பிற்சேர்க்கை |
| அனுபல்லவி | கீர்த்தனையின் இரண்டாவது உறுப்பு |
| அனுபவசாலி | நிறைந்த அனுபவம் உள்ளவர் |
| அனுபவம் | பட்டறிவு |
| அனுபவி | உணர்ந்து மகிழ்தல் |
| அனுபூதி | (ஆன்மீகத்தில்)அறிந்து அனுபவமாக மாறுதல் |
| அனுபோகம் | ஒருவர் தன் வசத்தில் இருக்கும் உடைமையை அனுபவிக்கும் உரிமை |