அ - வரிசை 47 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
| சொல் | பொருள் |
|---|---|
| அலட்டு | வருத்திக்கொள்ளுதல்,கவலைப்படுதல்,பெருமையடித்தல் |
| அலம்பு | கழுவுதல் |
| அலம்பு | கைகால், பாத்திரம், உடுப்பு முதலியவற்றைக் கழுவுதல் |
| அலமாரி | பொருள்கள் வைப்பதற்கு வசதியாகச் சில தட்டுகள் கொண்டதும் கதவுகளை உடையதுமான அமைப்பு |
| அலர் | (பூ)மலர்தல் |
| அலரிப்பூ | அரளிப்பூ |
| அலவாங்கு | கடப்பாரை |
| அலறல் | (பயத்தினால் எழுப்பும்) பெரும் குரல் |
| அலறியடித்துக்கொண்டு | பதறிப்போய், பெரும் பதற்றத்துடன் |
| அலறு | பயம்,வலி முதலியவற்றால் கூக்குரலிடுதல் |
| அலாதி | தனித்தன்மை கொண்டதி,சிறப்பானது,வித்தியசமானது |
| அலாரிப்பு | நாட்டியம் கற்பவர்களுக்கு முதல் பாடமான அடிப்படைச் சொற்களுக்கு ஏற்ப ஆடும் முறை |
| அலி | அரவானி |
| அலுகோசு | தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அரசாங்க ஊழியர் |
| அலுங்கு | லேசாக அசைதல் |
| அலுப்பு | சலிப்பு |
| அலுவல் | பணி |
| அலுவலகம் | (தொழிற்கூடம் அல்லாத )வேலை பார்க்கும் இடம் |
| அலுவலர் | அலுவலகத்தில் பணி புரிபவர் |
| அலை | பல இடங்களுக்கு போதல் |