த - வரிசை 18 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தில்ல

தில். தீயேன் றில்ல மலைகிழவோற்கே (ஐங்குறு. 204).

து

சுட்டுப்பெயர் வினாப்பெயர்களில் ஒன்றன்பால் குறிக்கும் விகுதி
தன்மையொருமை முற்றுவிகுதி. (தொல். சொல். 204.)
ஒன்றன்பால் வினைவிகுதி. (தொல். சொல். 8.)
பகுதிப்பொருள் விகுதி. (குறள், 637.)
கெடு
உண்
பிரிவு

தெய்ய

தெய்யோ. சொல்லினித் தெய்ய யாந்தெளியுமாறே (அகநா.220).

தெய்யோ

ஓர் அசைநிலை. வாரா யாயின் வாழேந் தெய்யோ (ஐங்குறு.239).

தொட்டு

குறித்து. அவனைத் தொட்டு எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை
தொடங்கி. பெருந்செல்வந் தோன்றியக்காற் றொட்டு (நாலடி, 2)

தொறு

தான்புணர்ந்த மொழியின் பொருண்மையினைப் பலவாக்கி அடுத்தடுத்து ஆங்காங்கு என்பன பட நிற்கும் ஓரிடைச் சொல். நவிறொறும் நூனயம் போலும் (குறள், 783). (நன். 420, மயிலை.)

தோ

நாயைக் கூப்பிடும் ஒலி

தரவை

கரம்புநிலம்
களை முடிய உவர்நிலம்

தவு

குன்றுதல். எஞ்ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து (குறள், 361)

திருட்டி

கண்ணுக்குப் புலனாதல். திருட்டித்த வாலமன் மதனொரு பாலிருக்க (சீதக்.118).

துவரன்

துவரம்

துறவி

துறுவு
துறந்தோர் தம்முன் றுறவியெய்தவும் (சிலப், 27, 95)

தொடரல்

கடல். (அக.நி.)

தொல்லை

துன்பம், மனத்தொல்லை யொழிவது என்று
செயல். (அக. நி.) அவனுக்குப் பலதொல்லைகளிருக்கின்றன

தக்கப்பண்ணு

ஒருவனது தகுதியைக் காட்டுதல். ஒருவேலையிற் றலையிட்டால் அதற்குத் தக்கப்பண்ணவேண்டாமா. (Loc.)

துக்கிதன்

துயரமுடையோன். தலைவலியரியுந்துக்கிதன் (சிவதரு. சனன. 48)

துக்கு

கீழ்மை
பயனின்மை
உதவாதவ + ன், து

தொடங்கி

ஆதிமுதல். தொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை (நாலடி, 173)

தாளமானம்

தாளவளவு. இனித் தாளமானத் திடையே நின்றொலிக்கும் (மலை பது, 9, உரை)

திமிர்

பூசுதல். சாந்தந்திமிர்வோர்(மணி. 19, 86)
தடவுதல். ஈர்ங்கை விற்புறந் திமிரி (புறநா. 258)
அப்புதல். பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே (ஐங்குறு. 347)
வாரியிறைத்தல். கையிடை வைத்தது மெய்யிடைத் திமிரும் (நற். 360)
ஒலித்தல். (சூடா.)
வளர்தல். (W.)
கம்பித்தல். நிலைதளர்ந் துடலந் திமிர்ந்து வேர்வரும்பி (திருவிளை. நாக. 19).