ம - வரிசை 1 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
மாயோன்

மாயோன் என்பவன் தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை நிலத்தெய்வமாவான்.

முற்றுவினை

தமிழில் வினைச்சொற்கள் முற்றாகவும் எச்சமாகவும் வரும். எச்சமானது பெயரெச்சமாகவோ, வினையெச்சமாகவோ இருக்கும். முற்றோ, எச்சமோ எதுவாயினும் காலம் காட்டும். காலம் காட்டாத வினைப்பகுதியோடு இணைந்து நிற்கும் தொடரை வினைத்தொகை என்பர்.

மூஞ்சூறு

எலி வகை
இதன் தலை மற்ற எலிகளில் இருந்து வேறுபட்டு இருக்கும்.வாய்புறம் கூம்பு வடிவத்தில் இருக்கும்.
மாறுபட்ட முடிகளை தோலில் உடையதாக இருக்கிறது.

மூட்டை

உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு
மூடை
பொதி
48 பட்டணம்படி கொண்ட ஒரு சாக்கு அளவு
பெரும்பொய்
மூட்டைப்பூச்சி

மேல்விசாரணை

கண்காணிப்பு
மேற்கொண்டு செய்யும் நியாயவிசாரணை

மருத்துவமனை

உடல், மன பிணியால் பதிக்கபட்டவர்களை பராமரித்து குணமாக்கும் இடம்.

முக்கியஸ்தன்

முக்கியமானவன்

மறவு

வீரம்

மறவர்

ஒரு தமிழ்ச் சாதியினர்
போர்த் தொழில் புரிபவர்கள்

மறவர்

வீரன்

மறம்

வீரம்

மறவன்

வீரன்

மறவை

வன்கண்மையுடையது

மௌவை

தாய்

மௌவல்

காட்டு மல்லிகை பூ
தாமரை

மோறை

முருட்டுத்தனம்

மத்துவம்

மத்வர், மத்வாச்சாரியார்
இந்தியாவின் மூன்று மத தத்துவ போதகர்களில் ஒருவர்

மகரந்தம்

மலர்த்தாது
பூந்தேன். (பிங்.)
கள். (பிங்.)
வண்டு. (அரு. நி.)
குயில். (மூ. அ.)

மிட்டாய்

சர்க்கரையை முதன்மை மூலப்பொருளாகக் கொண்ட இனிப்பு வகையாகும்