ப - வரிசை 25 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பரிதிவட்டம்

சூரியமண்டலம். வெங்கதிர்ப் பரிதிவட்டத்தூடுபோய் விளங்குவாரே (திவ்.பெரியதி, 4, 5, 10).

பலாந்தம்

ஒருகாற்காய்த்துப்பட்டுப்போம் பூண்டு (யாழ்.அக.)
மூங்கில்

பின்மாலை

வைகறை. பின்மாலையே திருவிளக்கேற்றி வைத்துத் தயிர் கடைவார்கள் (ஈடு 1, 3,1, ஜீ.)
விடியற்காலையில்.

பழமை

தொன்மை

பூர்வம்

ஆதி
பழமை
முதன்மை
முற்காலம்
கிழக்கு
பூர்வாகமம். (சீவக. 1246, உரை.) (adv.)பூர்வகம்

பூருவம்

பழமை. பூருவ வயிரநாடிப்போர் விளைத்து (சேதுபு. கத்து. 37).
கிழக்கு. (பிங்.)
பூர்வாகமம். (யாழ். அக.)
முன்பு. சமர்மலைந்ததுமுண்டு பூருவம் (பிரபோத. 30, 52).

பெரும்பாடு

பேருழைப்பு
சூதகவுதிரவிறைப்பு நோய்
கருப்பவுதிர விறைப்பு

பெரும்பான்மை

புகழுரை. தலைமகளைப் பெரும்பான்மை கூறி (திருக்கோ. 164, உரை)
பெரும்பாலும். பெரும்பான்மையு மறிதற் கரிதாம் விதி (இறை. 3, பாட்டு. 50)

பசிந்தி

வெண்ணிறமுள்ளதும் 15-ஆங்குலம்வரை வளர்வதுமான கடல்மீன்வகை.

படி

அளக்கப் பயன்படும் ஒரு அளவை = 8 ஆழாக்கு
எ.கா. ஒரு படி அரிசி.
மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி
மாடிப் படி

படி

கற்க

பிடித்து

கைப்பிடிப்பொருள். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037)
தொடங்கி. என்பிறப்பேபிடித்து (ஈடு, 2, 1, 1).

பின்னடி

பிற்பட்டது
கடைசி. (யாழ். அக.)
வருங்காலம். (யாழ். அக.)
பிற்சந்ததி. (யாழ். அக.)
பின்புறம்
உடனே

பின்னை

பின்னைப் புதுமைக்கும் (திருவாச. 7, 9)
தங்கை. உலகமூன்றுங் காவலோன் பின்னை (கம்பரா. சூர்ப்ப. 29). (சூடா.)
தம்பி. (திவா.) பின்னை தன்னுட னடுக்கலை (கந்தபு. முதனாட்போ. 9)
மேலும்
பிறகு. (சூடா.) பின்னை ... அழிந்தேன் (திருவாச. 44, 5).

புறன்

பழிச்சொல். கேளாம் புறன் (சி. போ. அவையடக். 9)
காணாதபோது. புறனழீஇப் பொய்த்து நகை (குறள், 182)
புறம்

பூதராயன்

பிசாசம். (யாழ். அக.)

பூரி

மிக்க. நங்குடி கோத்திரப்பெயர் பூரிச்சிரேட்டம் (பிரபோத. 11, 91). -n.

பூரா

முழுதுமான
முழுதும்

பெய்துரை

இடைப்பெய்து உரைப்பது
பாயிரம். (பிங்.)

பெரிது

பெரியது. நன்மை கடலிற் பெரிது (குறள்,103)
மிகவும். கலங்குவள் பெரிதென (கலித். 27)