ச - வரிசை 33 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
செல்வப் பேறுகள்

தனம்
தான்யம்
அரசு
பசு
புத்திரர்
தைரியம்
வாகனம்
சுற்றம்

சூரியனின் குதிரைகள்

காயத்திரி
திருட்டுபு
செகதி
அனுட்டுபு
பந்தி
பிரகதி
முட்டிணுகு

சிவ தத்தவம்

சுத்த வித்தை
ஈசுவரம்
சாதாக்கியம்
விந்து
நாதம்

சிவபுராணங்கள்

சைவ புராணம்
இலிங்க புராணம்
கந்த புராணம்
கூர்ம புராணம்
வாமன புராணம்
வராக புராணம்
பெளஷக புராணம்
மச்ச புராணம்
மார்க்கண்டேய புராணம்
பிரமாண்ட புராணம்

சூரிய புராணம்

பிரம கைவர்த்த புராணம்

சிங்கை

சிங்கப்பூர் குடியரசு

சங்காத்தம்

உறவு, நட்பு எனப் பொருள்படும். அதேவேளை சங்காத்தன் என்பது நண்பன் என்றும் சங்காத்தி என்பது நண்பி என்றும் பொருள்தரும்.இந்த நல்ல இலக்கியச்சொல் யாழ்ப்பாண மக்களின் பேச்சு வழக்கில் இன்றும் பரவலாகக் காணப்படுகிறது.

சுணங்கன்

பண்டைய இலக்கியங்களில் இச்சொல் காணப்படுகிறது. நாய் என்பது இதன் கருத்து. நாயை ஞமலி, குக்கல் என்ற பதங்களாலும் அழைப்பர்.

சிராய்

மரச் சக்கை : சிறாம்பு
உராய்ந்து கீறல் ஏற்படுதல்
மரத்துண்டு, பலகை முதலியவற்றை இழைக்கும்போது அல்லது செதுக்கும் போது கிடைக்கும் மெல்லிய துண்டு

சிற்றன்னை

தாயின் இளைய சகோதரிகள், தந்தையின் பிந்திய தாரம், தந்தையின் இளைய சகோதரர்களின் மனைவிமார்,தந்தையின் இளைய மைத்துனிமார், தாயின் இளைய மைத்துனர்களுடைய மனைவிமார் ஆகியோரைக் குறிக்கும் உறவுச் சொல். சிற்றனையின் துணைவர் சிற்றப்பா எனப்படுவர். சிற்றப்பாவை சித்தப்பா என அழைப்பது போன்று சிற்றன்னையைச் சித்தி என அழைப்பது நடைமுறையாகும்.

சேர்

நிறைக்கான ஒரு எடுத்தல் அளவை ஆகும்.
தனித்தனியாக இருப்பதை ஒன்றாக்கு
இணை
கூட்டு
தளைவார் - மாடுகளின் அல்லது விலங்குகளின் கால்களைக் கயிற்றால் பிணைத்தல்/ சேர்த்துக்கட்டுதலுக்கும் சேர் என்று பெயர்.
திரட்சி

சொந்தம்

தனக்குரியது
நெருங்கிய உறவு

செம்மொழி

தொன்மை
தனித்தன்மை
பொதுமைப் பண்பு
நடுவு நிலைமை
தாய்மைத் தன்மை
பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை
இலக்கிய வளம்
உயர்சிந்தனை
கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
மொழிக் கோட்பாடு
செம்மையான மொழிக்கு இருக்க வேண்டிய தகுதிகள்.

சேர்வு

சேர்ந்திருத்தல்
துணைக்கொள்ளுதல்

சமம்

போர்

சண்டியர்

வீண்வம்பு செய்பவர்கள்

சலவைக்கட்டி

சவர்க்காரம்

சிறு பொழுதுகள்

ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்
காலை - (காலை 6 மணி – 10 மணி வரை)
நண்பகல் - (காலை 10 மணி – பிற்பகல் 2 மணி வரை)
எற்பாடு - (பிற்பகல் 2 மணி – மாலை 6 வரை)
மாலை - (மாலை 6 மணி – முன் இரவு 10 மணி வரை)
யாமம் - (இரவு 10 மணி – பின் இரவு 2 மணி வரை)
வைகறை - (விடியற்காலம் 2 மணி – பின் இரவு)

செம்மல்

பூவின் வாடி வதங்கிய நிலை

சூளுரை

உறுதிமொழி