க - வரிசை 113 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
காட்டேறி

வனதேவதை
காடுறை தெய்வம்

காடுறை

காடு + உறை
காட்டில் வாழக்கூடிய

கானகநாடன்

வனவாசி

காடாற்று

இறந்த உடலை எரித்த சாம்பலை வைத்து செய்யப்படும் ஒரு சடங்கு

காதணி

காதில் அணியும் அணிகலன்

கம்மல்

பெண்கள் காதில் அணியும் சிறிய காதணி, ஓசை குறைவு

காணிக்கடன்

ஒரு நிலம் (அ) காணி வாங்குவதற்காக வழங்கப்படும் கடன்

குமரி

பூப்படைந்த/பருவமடைந்த, திருமணமாகாத பெண்
கன்னி
மகள், புதல்வி
மாசு படாத, கேட்டுபோகாத நிலை
அழிவின்மை,இளமை மாறாமை

குமாரி

மகள்,புதல்வி, குமரி
இளைஞி

கழஞ்சு

கழஞ்சு என்ற சொல்,ஒரு செடியின் விதையினைக் குறிக்கும்,
பழந்தமிழர் அதிக அளவு தங்கத்தைக் கூட அளக்கும் அலகாகப் பயன்படுத்தினர்.
கழஞ்சு திரிந்து கிழிஞ்சு என்று கூறப்படுவதும் உண்டு.

காண்டலளவை

நமக்குள்ளே, நாம் பெறும் அறிவை அளத்தல்.ஐம்பொறிகள் மற்றும் நூல்கள் மூலம், நமக்குக் கிடைத்த அறிவைத் தவிர மற்றவை,
சுயசிந்தனை(thinking) மற்றும் அனுமானம்(presumption) நமக்குக் கிடைக்கக் கூடிய அறிவை அளத்தல்.

குறுணி

எட்டுப்படி கொண்ட ஒரு சிறிய தானிய அளவு; மரக்கால்

கொண்டல்

கீழ் காற்று

கீழ்க்காற்று

கிழக்குத் திக்கில் இருந்து வீசுகின்ற காற்று

கொங்கு

தேன்

கொங்கலர்தார்

தேன் மணம் வீசுகின்ற மலர் மாலை

கண்மூன்றுடையான்

சிவபெருமான்

கைக்கொடுத்தல்

உதவுதல்

காண்டல்

படையை உண்டாக்கல்

கொல்லாமை

ஓருயிரையும் கொல்லாமை