ஏ - வரிசை 18 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
ஏகாதசிவிரதம்

ஏகாதசியிற் செய்யப்படும் பட்டினிநோன்பு

ஏகாதிபதி

சக்கரவர்த்தி

ஏகாந்தசேவை

சில உற்சவங்களிலே இரவில் ஏகாந்தமாக நிகழும் ஸ்வாமி ஸேவை. (Loc.)

ஏகாந்தநித்திரை

அமைதியான தூக்கம்.
இலௌகிகவிசாரஞ் சிறிதுமில்லாத துறவு நிலை. (சங். அக.)

ஏகாந்தம்

தனிமை
ஒருவரும் இல்லாத இடம்; தனித்து இருக்கும் இடம்; தனியிடம்
இரகசியம். அவனுடன் உனக்கென்ன ஏகாந்தம்?
நிச்சயம்
நாடிய ஒரே பொருள்
தகுதியானது

ஏகாந்தவாதி

ஆருகதரல்லாத சமயி. ஏகாந்தவாதிக ளெண்கெட்ட வாதம்போல் (அறநெறி. 18)

ஏகாந்தவாழ்வு

தனிவாழ்க்கை
துறவியின் வாழ்க்கை

ஏகாம்பரநாதர்

காஞ்சீபுரத்திற் கோயில்கொண்டுள்ள சிவபிரான்

ஏகாம்பரர்

ஏகாம்பரநாதர்

ஏகாம்பரம்

ஒருமாவின்கீழ்ச் சிவன் கோயில்கொண்டுள்ள காஞ்சீபுரம். தொல்லுவகுபுகழ் காசியேகாம்பரம். (அறப். சத. 59)

ஏகாயம்

ஏகாசம். தோலுடையாடை யேகாயமிட்டு (தேவா. 159, 4)

ஏகாயனர்

மாத்துவர்

ஏகாலத்தி

ஏகாலாத்தியம்

ஏகாலாத்தியம்

பூசையில் சுவாமிக்குமுன் சுற்றும் ஒற்றைச்சுடர்த் தீபம். (பரத. ஒழிபி. 41, உரை.)

ஏகாலி

வண்ணான். (பிங்.)
சவர்க்காரம். (மூ. அ.)

ஏகாவல்லி

ஏகாவலி

ஏகாவலி

ஒற்றைச்சரமாலை. ஏகாவலியுஞ் சாத்தீரே (கலிங். 500, புதுப்.)

ஏகான்மவாதம்

பிரமம் ஒன்றைத்தவிர வேரொன்றுமில்லை என வாதிக்கும் மதம். (சி. போ. பா. அவைய. பக். 47.)

ஏகி

கைம்பெண். (W.)

ஏகீபாவம்

ஒன்றுபடுகை